குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

07.07.2011.த.ஆ.2042--தமிழ்மொழியின் சிறப்பு - திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது. ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

 1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்4. இலக்கியச் சான்றுகள்5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்6. பழைய நாணயங்கள்7. அரசு சாசனங்கள்8. அரசர்களின் ஆவணங்கள்9. கலைகள் - (இயல், இசை, நாடகம்)10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

 இது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.

தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அவைகள்:

1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி2. வட்டெழுத்துக்கள்3. கோலெழுதுக்கள் மற்றும்4. மலையாண்மை,

 என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்

தமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார்.

 அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்

1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

 2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.

3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும்,

எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

 4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே! என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.

 5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.

6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.

 7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.

 8)நந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று கூறுகிறது.

 9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.

 10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….

 11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.

 12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.

 13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

 14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வண்ணமே! தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.

உண்மை வரலாறு

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

 புகழ்க்கொடி நாட்டியது

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட திராவிடத் தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை,நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.

 முக்கியக் குறிப்பு

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால் திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே! இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்.

குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

குமரிக்கண்டம்! நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவியலவில்லை.ஆனால், இதனையொட்டி சில உண்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். குமரிக்கண்டமே தமிழனின் வரலாற்றின் ஆரம்பம் என்றும் கூறலாம். கடல்கோள்களால்  குமிரிக்கண்டம்  அழிவை எதிர் நோக்கியுள்ளது என்று அறிஞர்களும் கூறுகின்றனர். இவ்வழிவு கட்டம் கட்டமாக நிகழ்ந்திருப்பதாக நிலநூல் வல்லார்கள் தங்களது ஆராய்ச்சியில் நிரூபித்தும் வருகின்றனர்.  இதனையொட்டி  'ஸ்காட் எலியட்' (W.Scott Elliot)  என்பவரின் கருத்தினை சிந்திக்கவே வேண்டும். இவர் பதினாறாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் முதல் கடல் பெருக்கு  ஏற்பட்டதாகவும்,  மூன்றாவது  கடல் பெருக்கு இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகவும்,  நான்காவது கடல் பெருக்கு  எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிவை ஏற்படுத்தியதாகவும், ஐந்தாவது கடல் பெருக்கு கி.மு 9564இல் ஏற்பட்டதாகவும்  தனது ஆராய்ச்சியில் குறிப்பிடுகின்றார். இக்கூற்றை ஒப்பீடு செய்து பார்க்கும் போது அட்லாண்டிக் கடல் பகுதியில் முன்பு ஒரு பூகம்பம் ஏற்பட்டு 'பொசிடோனியஸ்' எனும் தீவு கி.மு 9564இல்அழிந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுவே  முத்தமிழ் செல்வனின் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                  குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம். அதில்,வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.
               முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்திருக்கலாம் .இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்றும் சான்றுகள் பகரப்படுகின்றன. அது  ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாகவும்  இருக்கலாம்.( நன்றி: அரவை அரன்.)
               நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான்  பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாகவே  இப்பகுதிகளின் அடித்தளங்கள், எரிமலை அதிர்ச்சியினால்  மிக விரைவில் இரவு நேரத்தில் மறைந்து போனதாகவும் இந்நில வெடிப்பில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாகவும் மொத்தம் 64000000 மக்கள் அழிந்ததாகவும் , தொறானோ கையெழுத்துப் படிவத்தில் உள்ளது. இப்படிவம் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிப்பதாகவும் , இன்றும் இலண்டனில் நூதனப் பொருட்காட்சி சாலையில் உள்ளது  என்றும்  'ஸ்காட் எலியோட்' கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பார்த்தோமானால், குமரி நாட்டின்  வடக்கு எல்லை  விந்திய மலையாக இருந்திருக்கிறது. இமயமலையும் சிந்து சமவெளிகளும் அப்போது  இல்லை. ஆகவே, குமரி நாடு ஆசியக்கண்டத்தின் ஒரு பகுதியாக இராமல் தனியான பெரு நாடாக நிலவி இருந்ததும், பிற்காலத்தில்  கடலுள் மறைந்துவிட்டதும் நாம் அறிதல் வேண்டும். குமரி நாட்டின் குமரி ஆறும் தெற்கே பஃதுளி ஆறும் அக்காலத்தில் ஓடிக்கொண்டிருந்தன என்பதை புறநானூற்றின் 9 ஆம் பாடலாலும் இதனை அறியலாம்.


தமிழனும் குமரிக்கண்டமும்: காணொளியைக் காண்க

மேலும்,    குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள் என்றும்
 தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான். இதற்கும் சான்றாகக் குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்றும் இவ்வுலகில் தோன்றிய முதல் குரங்கு மனிதனே  பழந்தமிழ் நாட்டனாகத்தான் இருக்க முடியும் என்பதோடு விஞ்ஞானிகள்,  நில நடுக்கோடு எப்பகுதியில் செல்கிறதோ, அப்பகுதியிலே, ஆதி கரு உற்பத்தியாக முடியும் எனவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, சீனிவாச ஐயங்கரும்,   'பன்னெடுங் காலத்திற்கு முன் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களை உள்ளிட்டு, நில நடுக்கோட்டுப் பகுதியில் நிலவிய லெமுரியா விலங்கியது. இப்பகுதியே, மக்களின் பிறப்பிடமாக இருக்கலாம். தென்னிந்தியாவில் தோன்றி வாழ்ந்த பழங்குடி மக்களின் சந்ததிமார்களே திராவிடர்கள்.'  எனக் கூறுவதும் இங்கு சான்றாகிறது.(நன்றி: முத்தமிழ் செல்வன்)

ஒரு அறிவியல் புனைவு லாகவத்துடன் இதற்கு அப்பாலும் போகக்கூடிய கற்பனையாளர்கள் உண்டு. உதாரணமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மைந்தன்’ எனும் ஆராய்ச்சியாளரைக் குறிப்பிடலாம். குமரிக்கண்டக்காரர்கள் வெறுமனே மூதாதைகள் மட்டுமல்ல. அறிவியல் வல்லுனர்கள். ஆகாய விமானங்களை அப்போதே கண்டுபிடித்தவர்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத்தக்க தொழில்நுட்பத் திறனாளிகள். உலகெங்கும் பறந்து பண்பாட்டைப் பரப்பியவர்கள். உலகின் மற்ற பாகங்களில் வாழ்ந்த பண்பாடில்லாத மக்களுக்குப் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் அளித்தமையால் இவர்களை அம்மக்கள் ‘கடவுள்களாக’ வணங்கினர் எனவும் கூறப்படுகின்றது.
             தொடர்ந்து, ஆதிமனிதன் மூதாதைகளுக்கு ஆஸ்திரேலா பிதகஸ்(குரங்கு மனிதன்) பிதகாந்தரப்பாஸ் (மனிதனின் மூதாதை). ஹோமா சாப்பியன் (ஆதிமனிதன்) என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கின்றனர். இந்துமாக் ஓரத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவிலும், ஜாவாவிலும் மனிதனின் மூதாதையர்கள் வாழ்ந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதற்கான சான்று (Burns Edward Mc And Philip Lee Ralph, World Civilization: From Ancient to Contemporary, Vol 1 ) ல் உள்ளது.
             அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும், குமரிக்கண்டத்தின் சான்றுகள்  பல காணவே படுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்கும்போது,  பழந்தமிழ் நிலப்பகுதியே ஆதித் தமிழரின் தாயகம் என்ற முடிவுக்கு நாம் வருவதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. மேலும், ஆதி மூதாதை ஆதித் தமிழினத்தார் என்றே கூறவும் வேண்டும்.      தொடரும்....


(குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் யாம் படித்ததையொட்டியும், எந்தன் தேடலையொட்டியுமே அமைந்திருக்கிறது. பல மேற்கோள்களைக் கொண்டே செய்திகளை முன் வைத்துள்ளேன்.  இங்கு விடுப்பட்ட  விடயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. )
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.