அவர்களுக்கு அதைக் கூறி வாக்குக் கேட்குமாறும கேட்டுக்கொண்டனர். இந்தத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி வெல்லுமாவென சர்வதேசமும் குடாநாட்டிற்கு வெளியே உள்ளவர்களும் பார்ப்பதால் வெற்றி என்பது முக்கியம் என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே எதிர்வருகின்ற காலங்களிலே தமது அமைச்சர்கள் குழு பிரச்சார நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத்தில் விரைந்து செயற்படவுள்ளதாக உறுதி கூறப்பட்டது. உள்ளுராட்சிச் சபைத் தேர்தலுக்கான உத்திகளை வகுக்கப்படும் வகையில் நேற்றைய கூட்டம் இட்பெற்றிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் திறக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத் திறப்புவிழாவிலும் கலந்துகொண்டனர். ஆனாலும் நாமல் ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதியின் அவசர அழைப்பினை ஏற்றுக் கொழும்பிற்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று இந்தத் திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தப்பக்கம் எட்டிப் பார்த்திருக்கவில்லை.எனினும் ஈ,பி.டி.பி.யின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமார் அங்கு வருகை தந்திருந்தார். அவர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார். இந்த அலுவலகம் தேர்தலுக்காண இணைப்பு அலுவலகமாகச் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனிடையே யாழ்ப்பாண உள்ளுராட்சி சபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில்; அரசின் உயர்மட்ட அமைச்சர்கள்வரை பிரச்சார நடவடிக்கைக்காகக் களமிறங்கியுள்ளமை அதன் பெறுமதியை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தரப்புக்கள் கூறுகின்றன.
இலங்கை இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – யெயலலிதா
04 .07. 2011 இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகிய தீர்மானங்கள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.