குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்

திருவனந்தபுரம், ஜூலை. 3 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் தோண்ட தோண்ட தங்க நகை களும், நவரத்தின கற்கள் பதிக் கப்பட்ட நகைகளும் குவியல் குவியல்களாகக் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுமாம். கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பழமையான அனந்த பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவி தாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்த மான அறக்கட்டளை யின்கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவி லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர்  வந்து  செல்கின்றனர்.

இந்த கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறை கள் உள்ளன. அவை நீண்ட காலமாக பூட்டி சீல் வைக்கப் பட்டு இருந்தன. இந்த கோவிலின் நகை தொடர்பாக  உச்சநீதிமன் றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட் டது. அதைத் தொடர்ந்து கோவிலின் பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து பட்டியலிட்டு அனுப்பும்படி உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

பாதாள அறைகளில் ஏராள நகைகள்

இதற்காக கேரள உயர்நீதி மன்ற  நீதிபதிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்த குழுவினர் கடந்த திங்கட்கிழமை முதல் பாதாள அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக் கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் திறக்கப்பட்ட இரு அறைகளில் தங்க குடங்கள், பொற்காசுகள் போன்றவை இருந்ததை கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி, வைரம், வைடூரிய நகைகள் மதிப்பீட்டு குழுவினரை வியப்பில் திக்குமுக்காட வைத்து விட்டது. கலைநயம் மிகுந்த பல பொருட்கள் விலை மதிப்பிட முடியாத அளவுக்கு இருந்தது.

இதற்கிடையே ஜூலை ஒன்றாம் தேதி திறக்கப்பட்ட முதல் இரண்டு அறைகளில் கண்ணை பறிக்கும் நகைகள் மூட்டை, மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. முதல் அறையில் 18 அடி நீளம் உள்ள தங்க மாலைகள் உள்பட ஏராள மான நவரத்தின நகைகள் குவியல் குவியலாக இருந்தன. இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

1772ஆம் ஆண்டு பொற்காசுகள்

இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி காலத்துக்கு முற்பட்ட 17 கிலோ தங்க நாணயங்கள், நெப்போலின் மன்னர் கால 18 நாணயங்கள், பட்டுத்துணியால் போர்த்தப்பட்ட அபூர்வ வைரக்கற்கள், அத்துடன் ஆயிரம் கிலோ தங்க நாணயங்கள், தங்கத்தினால் ஆன சிறிய அணிகலன்கள், சிறிய தங்க யானை சிலைகளும் இருந்தன.

1772-ஆம் ஆண்டு முத்திரை யுடன் கூடிய பொற்காசுகள், மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மாவின் ஆட்சிக்கா லத்தை குறிப்பிடுவதாக அமைந் துள்ளது. பெல்ஜியம் ரத்தின கற்கள், 2 ஆயிரம் மாணிக்க கற்கள், ராணிகள் அணியும் தங்க ஒட்டியாணங்கள், மன்னரின் கிரீடங்கள், தங்க வாள்கள், சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க சால்வைகள், தங்கத்தால் பொதி யப்பட்ட ருத்திராட்ச மாலை களும் கிடைத்துள்ளன.

நேற்று 6ஆவது நாளாக கணக்கெடுக்கும் பணி நீடித்தது. நேற்றும் தோண்ட தோண்ட தங்கம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்கள் அடங்கிய நகை கள் ஏராளமாக கிடைத்தன. மேலும் சாமிக்கு அணிவிக்கப் படும் தங்க வைர கிரீடங்கள் உள் பட பல வகையான நகைகளும் குவியல் குவியலாக உள்ளன.

இந்த நகைகளை வெளியே எடுத்து வந்து கணக்கிடும் பணி  நடந்து வருகிறது. விலைமதிக்க முடியாத, கலைநயம் மிக்க அரிய நகைகளாக அவை உள்ளன. இதனால் மொத்த நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று கருதப்படுகிறது.

உலகில் பணக்கார கடவுள்

உலகத்திலேயே பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலை யான் கோவில்தான் இதுவரை இருந்து வருகிறது. தற்போது திருவனந்தபுரம் அனந்த பத்ம நாபசாமி கோவிலில் கிடைத் துள்ள நகைகள் திருப்பதி கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் ஆட்சிக் காலத் தில், அரண்மனைகளை விட கோவில் ரகசிய அறைகளில் நகைகள் வைத்திருந்தால் பாது காப்பாக இருக்கும் என கருதி இதுபோல் நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். இவற்றில் சில வற்றை சாமிக்கு சாத்தவும், வீதி யுலாவின்போது அணிவிக்கவும் பயன்படுத்தி உள்ளனர்.

திருவனந்தபுரம் கோவில் நகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாவதை தொடர்ந்து பன்னாட்டுப் பார்வை இந்தக் கோவிலின்மீது  விழுந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இத னால் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டு உள்ளது.

சோதனைக்குப் பிறகே மெட்டர் டிடெக்டர், கண் காணிப்பு கேமரா, ஸ்கேனர் வசதி செய்து கொடுக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே சிலையைப் பார்ப்பதற்கு  அனுப் பப்படுகிறார்கள்.
இதற்கிடையே கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கேரள காவல்துறை டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ் காவல் துறை உயர்  அதிகாரிகளின் கூட்டத்தை நேற்று கூட்டினார். உடனடியாக 2 பிரிவு விசேஷ அதிரடிப்படையினர் பாதுகாப் புக்கு நிறுத்தப்படுவார்கள் என்று திருவனந்தபுரம் நகர காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
கொள்ளை முயற்சியை தடுப்ப தற்காக கோவிலுக்கு மூன்றடுக்கு காவல்துறை  பாதுகாப்பு வழங்க வும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இரவு பகலாக 24 மணி நேர தொடர் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நகைகள் கணக்கெடுப்பு தொடர்ந்த நிலையில், "கோவி லில் சோதனை நடத்தக்கூடாது. அதனால் வெளியாகும் தகவலால் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளைபோக வாய்ப்பு உள் ளது'' என்று கூறி ஒரு குழுவினர் கோவிலின் மேற்கு நடை முன் திரண்டு நின்று எதிர்ப்பு தெரி வித்தனராம்.
நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந் துள்ள டி.பி.சுந்தரராஜன்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி அவருக்கும் எதிராக ஒலி முழக்கம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி கள் சி.எஸ்.ராஜன், எம்.என். கிருஷ்ணன், நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந் தரராஜன் ஆகியோர் கோவில் நிர்வாக அதிகாரியின் அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஏராளமாக காவல்துறையினர்  வரவழைக்கப்பட்டனர். காவல் துறை  துணை ஆணையர்  பி.பி. ஜோஸ் தலைமையில் காவல் துறையினர்  அவர்கள் 3 பேரை யும் தக்க பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த நிதிக்குவியல் பற்றிய அறிக்கை அடுத்த மாதத்திற்குள்  உச்சநீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப் படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.  பாம்புப் படம் கண்டு பயமாம்
பத்மநாபசாமி கோவில் ரகசிய பாதாள அறைகளில் உள்ள நகைகள் விவரம் கணக்கெடுக்கப் பட்டு வருகிறது. இந்த பணியின் போது மதிப்பீட்டு குழுவினர் ஒரு அறையை திறக்க முயன்றபோது அதன் கதவில் பாம்பு படம் வரை யப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த அறையில் ஆபத்து எதுவும் இருக்கலாம் என்று கருதி, அதை திறக்காமல் விட்டு விட்டனர். பின்னர் உரிய பாதுகாப்புடன் அந்த அறையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.