221. |
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. |
222. |
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. |
223. |
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. |
224. |
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. |
225. |
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். |
226. |
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. |
227. |
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. |
228. |
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். |
229. |
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். |
230. |
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. |