இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான ஆறாவது கூட்டத் தொடர் யாழ். நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர் முடியப்பு றெமிடிஸை உரையாற்றுமாறு மேயர் அழைப்பு விடுத்திருந்தார்.
இவரது அழைப்பை எதிர்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி ஆட்சேபனை தெரிவித்ததும் முடியப்பு றெமிடியஸ் “நீ இருடா நாயே உனக்கு என்ன வெறியா” என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை சபையில் பேசியவாறு எதிர் கட்சி உறுப்பினர் மீது தாக்குவதற்கு முயன்றுள்ளார்.
உடனே யாழ்.மாநகர சபை எதிரணி உறுப்பினர் கனகரெத்தினம் விந்தன் இருவரையும் மோத விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பரஞ்சோதி முடியப்பு றெமிடியஸின் அடாவடித்தனத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேயரிடம் வேண்டுகோள் விடுத்தார் அவரது பணிப்பை மேயர் எதுவும் செய்யமுடியாது எனத் தெரிவித்ததும் யாழ். பொலிஸாருக்கு தொடர்பு கொண்ட பரஞ்சோதி தொலைபேசியின் ஊடாக முறையிட்டுள்ளார்.
முடியப்பு றெமிடியஸின் இந்த அநாகரிகமான செயற்பாடு காரணமாக யாழ். மாநகர சபை அல்லோலப்பட்டது. அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களினால் சபை திக்குமுக்காடியது.
யாழ் நகரத்தின் கண்ணாடியாக அதனைப் பிரதிபலிக்கும் விம்பமாக விளங்கும் மாநகரசபையில் இவ்வாறான அசிங்கங்கள் நிகழ்வது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.
சுவிசில் அழகிய தமிழ் பெண் திடீர் மாயம்!
வெள்ளி, 01 ஆடி 2011 00:10 .
அழகிய தோற்றம் உடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் சுவிற்சலாந்தில் கடந்த இரு வார காலமாக மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளார்.
இவரின் அகவை 17.
வீட்டை விட்டு கடந்த 16 ஆம் திகதி புறப்பட்டு இருந்தார். இன்னமும் திரும்பி வரவில்லை.
இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.