191. |
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். |
192. |
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. |
193. |
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. |
194. |
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. |
195. |
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். |
196. |
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். |
197. |
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. |
198. |
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். |
199. |
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். |
200. |
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். |