22 .06. 2011.த.ஆ.2042-- எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபாநாயகர் அமின் முலியா நிராகரித் துள்ளார்.இலங்கையின் உள்நாட்;டு போர் குற்றங்கள் தொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபாநாயகர் அமின் முலியா நிராகரித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை எனவு கூறிய சபாநாயகர் அதனை நிராகரித்துள்ளார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளமையை நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் சுட்டிக்காட்டினார். மலேசிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் மற்றும் பர்மா பிரச்சினைகள் அடிக்கடி விவாதிக்கப்படும். அப்படியாயின் ஏன் இலங்கை பிரச்சினை விவாதிக்க கூடாது என குலசேகரன் கேள்வி எழுப்;பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு முடிடைந்த 26 கால யுத்தத்தில், தமிழ் மக்கள் பல துயரங்களை அனுபவித்துள்ளனர்.
இலங்கையில் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 80 ஆயிரம் பெண்கள் விதவை ஆக்கப்பட்டுள்ளனர். சரண் அடைந்த 5 ஆயிரம் போராளிகளுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை. பல பெண்கள் குழந்தை பாலிய வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரில், ஒரு லட்சத்திற்கும் அதிகாமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.