21.06.2011.த.ஆ.2042---வடக்கு மக்களின் பதிவு நிறுத்தப்படவுள்ளது? யின் அடிப்படை உரிமை மீறல் மனு மீளப்பெறல்? கொழும்பு ஊடகங்கள்:- மீளப் பெறப்படவில்லை தேவையேற்படின் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்
- சுரேசுவடக்கு மக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட உள்ளதாக யாழ்;ப்பாண கட்டளைத் தளபதி மேயர் யெனரல் மகிந்த கத்துருசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
படைத்தரப்பினரால் வடக்கு மக்கள் பதிவுக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண கட்டளைத் தளபதியுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த பதிவு நடவடிக்கை நிறுத்தப்படும் என உறுதியளித்ததாக சுமந்திரன் குறிப்பிடடுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறிதரன், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
பலவந்தமான முறையில் பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பலவந்தமாக பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இது குறித்து இன்று லண்டன் நேரம் அதிகாலை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்ட போது மனு வாபஸ் பறப்படவில்லை எனத் தெரிவித்த அவர் முதல் முறை நீதிமன்றம் சென்ற போது பதிவை நிறுத்துவதாக படைத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டதனால் பின்னர் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படவில்லை எனத் தெரிவித்த அவர் மீண்டும் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.