ரசுயாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார மன்றத்தின் 15வது கூட்டத்தில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களைச் சந்திப்பதே இவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
சுமார் 100 வரையான நாடுகளினது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான முயற்சிக்கு பயன்படுத்த மகிந்த ராஜபக்ச எண்ணியிருந்தார்.
ஆனால் ரஷ்ய அதிபர் டிமிற்றி மெட்வெடேவ், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ஸ்பானிய பிரதமர் ஜோஸ் லூயிஸ் சபாட்டியோ, கசாகிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயெவ் ஆகியோரை மட்டுமே மகிந்த ராஜபக்சவினால் சந்திக்க முடிந்தது.
ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடனான சந்திப்பு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த நாடுகள் இரண்டும் ஏற்கனவே இலங்கைக்கான ஆதரவை உறுதி செய்திருந்தவையாகும்.
இவர்கள் தவிர சு(ஸ்)பானிய பிரதமரையும் கசாகிஸ்தான் அதிபரையுமே மகிந்த சந்தித்துப் பேசியுள்ளார்.
இவர்களுக்கே மகிந்த ராசுபக்ச நாட்டு நிலைமைகள் மற்றும் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானம், நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆனால் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் மிக்கதாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையல்ல என்றும் இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
மகிந்த எதிர்பார்த்தது போன்று பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க முடியாது போனதால், ரசுயப் பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.