"01சனவரி 2012 இலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 31 டிசம்பர் 2016 வரையான காலப்பகுதியில் ஐ.நாவின் பொதுச் செயலராகச் செயற்படுவதற்கு பான் கீ மூன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்கா, கரிபியன் போன்ற நாடுகள் பான் கீ மூனை மீளத் தெரிவு செய்யும் விடயத்தில் ஆதரவளிக்க முன்வராமையால் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை அறிவிக்க ஒரு நாள் காலதாமாகியுள்ளது.
வெள்ளி காலை வரை லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் போன்ற நாடுகள் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், இவற்றின் ஆதரவு என்பது உத்தியோகபூர்வமாகத் தேவையற்ற ஒன்று எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்றுள்ள ஐந்து உறுப்பு நாடுகளும் பான் கீ மூன் மீளவும் ஐ.நாவின் பொதுச்செயலராக கடமையாற்றுவதை ஏகமனதாக விரும்புகின்றார்கள்.
கொரியாவைச் சேர்ந்த பான் கி மூனுக்கு 67 வயதாகிறது. 2006-ம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தென் கொரியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார்.
ஐ.நா. பொதுச் செயலாளராக இவரது இரண்டாவது பதவிக்காலம் 2012-ம் ஆண்டு தொடங்கி. 2016 வரை இப்பதவியில் இருப்பார்.