18.06.2011.j.M-2042--டில்லிக்கம் அங்கும் இங்கும ஓடித்திரிகின்றார்கள். இலங்கையில் அடைபட்டு இருக்கும் மக்களையும் பார்த்துவிட்டு அவர்கள் நலமாக இருக்கின்றார்கள் என்றார்கள். யாரைப்பார்க்க ஏன் சென்றார்கள் என்பதை மறந்தார்கள்
பகைவரையும் உண்மையையும் மறந்தார்கள் மந்திரமாய் இருந்தார்கள். இலங்கைப்பிரசை்சனை தமிழகத் தேர்தலைத்தாக்காது என்றனர் ஏமாந்மனர். இதுவரையும் என்ன செய்தனர் தமிழ் என்று அரைக்கின்றனர் என்று மக்கள் எண்ணினர். கட்சி என்பதைவிட்டு மக்கள் மனச்சாட்சி என்பதைப்பார்த்தனர். திராவிடம் என்பதும் தீவிரமாய் போராடுவதும் தமது ஆடசிக்காய் அது வந்ததும் டெல்லிக்காய் உழைத்ததும் தமிழ்மக்களின் உள்ளங்களில் ஊசியால் குத்தியது போன்று உணர்ந்து உள்ளதைச் செய்தனர்.தமிழ்நாட்டில் கட்சிக்காகவும் தலைவர்களுக்காகவும் பணத்திற்காகவும் வாக்குபோடும் மக்கள் எதிர்காலத்தில் இல்லை இதுதான் இம்முறை நடந்த தேர்தலில் வென்றது என்பதே உண்மை. பழையகட்சியினர் எவரும் வெல்லவில்லை இது புதியமாற்றம் தமிழகம் ஒன்றுபட்டால் வடக்கின் வாலாட்டம் கொட்டம் எல்லாம் அடங்கும்.பழையபல்லவிகளில் திருத்தமில்லை என்பது சட்டமன்றக்கட்டடம்
உபயோகப் படுத்தாமை உணர்த்துகிறது. சமச்சீர்க்கல்வி சிக்ககலாக இழுபடுவதும் சிலசின்னங்களை அகற்றுவதும் தமிழர்களுக்கு பிடிக்காத நிலையாகவே இருக்கிறது.