16.06.2011-த.ஆ.2042--தமிழர்கள் உலகளவில் உள்ள பிறஇனத்தவர் உயர்விற்கு பலவழிகளில் உழைத்துள்ளோம். உழைக்கின்றோம். இது இலங்கை இந்தியா மலேசியா ஆபிரிக்கா மொறீசுயசு. இன்று இலங்கைத் தமிழர்களின் கடின உழைப்பும் மூளைகளும் தமிழர்களின் உயர்வுக்கு இதுவரை பயன்படவில்லை.
போராளிகளாக்கி ஆயுதத்திற்கான பணமாக்கி பெற்றுக் கொண்டார்கள். பயங்கரவாதிகள் ஆக்கி அழிக்க ஒத்துழைத்தார்கள். பிடித்து அடைக்கவும் சித்திரவதைகள் நடக்கவும் யார்காரணம். இன்று விசாரணை வேண்டுமென்று துடிப்போரே. இன்று புனர்வாழ்வு ஒப்பந்த முறையில் எம்மைவைத்து பணம்பெறுகிறார்கள். எமது வீடுகளை எமது நாடுகளில் அழித்து விட்டு வெளிநாடுகளில் சிறுகூடுகள் கொடுத்து பல கோடி பணம்கறப்பதோடு கடன்காறத் தமிழனாக ஒப்பந்தமும் செய்து வருகிறான். ஒட்டுமொத்தத்தில் என் உழைப்பு உன்வங்கிக்கு நான் இறக்கும் வரையும் கடன்காறன் இறந்தபின்னும் கடன்காறன். குமரிநாடு.நெற் இப்படிப்பார்ப்பது மற்றவர்க்கு சிரிப்பிற்கிடமாக இருக்கலாம். நடக்கும் உண்மை இது.
இன்று யாழ்ப்பாணம் எமக்கு எமது பண்பாட்டிற்கு சொந்தமென்று நம்புவது அறிவுமடமைஅன்று. காரணம் இந்திய பண்பாடடுத்திட்டத்திற்குள் அது போய்விட்டது. யாழ்ப்பாணத்தில் கலாச்சாரமையம் என்ற போர்வையில் உள்ள திட்டம் பற்றி ஆராயவில்லை. அது தமிழர் கலாச்சாரமையம் என்றுதானே வரவேண்டும் ஏன் அப்படிவர எமது படித்தோர் பாடுபடவில்லை. தமிழர்கலாச்சாரமையம் அமைக்கப் பாடுபடவேண்டும். இதையெல்லாம் யோசிக்காது தனியே கட்டிடக் குத்தகையை நாம் மட்டும் எடுத்தால் போதும் என்று நடக்கிறது விடயம். தமிழகதமிழுணர்வாளர்கள் இன்றைய சூழ்நிலைப் பயன் பாட்டடிப்படையில் யெயலலிதாவைக் கொண்டு அதைச்சாதிக்கலாம். தமிழகத்தால் அரசியல் ரீதியக ஏதும் செய்ய அதிகாரமிலை. பண்பாடுரீதியாக அவர்கள் சாதிக்க நிறைய வாய்ப்புண்டு.