குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மலேசியா மீள சிந்திக்க வேண்டும் - ப்ரோகாம்

 15 .06. 2011  இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மலேசியா மீள சிந்திக்க வேண்டுமென அந்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ப்ரோஹாம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு மலேசியா ஆதரவளித்து வருகின்றது.
 
எனினும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
 
2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்ட போது மலேசியா அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
 
தென் ஆபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை உரிமை மீறல்களுக்காக மலேசியா குரல் கொடுத்திருந்ததாக குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.