15 .06. 2011 இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மலேசியா மீள சிந்திக்க வேண்டுமென அந்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ப்ரோஹாம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு மலேசியா ஆதரவளித்து வருகின்றது.
எனினும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்ட போது மலேசியா அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
தென் ஆபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை உரிமை மீறல்களுக்காக மலேசியா குரல் கொடுத்திருந்ததாக குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.