பூநகரி . பொ.முருகவேள்ஆசிரியர்.சுவிற்சர்லாந்து.
ஆற்றல் பெற்ற சக்தியை ஆண்டவனாகமுற்கால மனிதன் உருவாக்கினான்
முற்காலத்தில் கற்காத மனிதனிடமும்
மானுடமிருந்து உயிர்கள்மகிழ்ந்தன.
கற்சிலைக்குள்ளும் கடவுள் சத்தியிருந்தது
தற்காலத்தில் மானுடத்தை விற்றுவிட்டதால்
ஆண்டவனைவியாபாரியாக்கி பொற்சிலைவைத்தாலும்
பொன்னென்ற உயர்வேயன்றி ஆண்டவன் எங்கே!
உருவமற்ற ஆண்டவனுக்கு தோற்றங்கள் பலகொடுத்து
ஒருமைபெற்ற சத்திக்கு வேற்றுமைகள்சொல்லி
மதங்கள் பலவாக்கி உலகெங்கும் கலகங்கள் உருவாக்கி
பொருளியல்குவிக்கும் கூட்டம் உலகஅகவைகளிலே!
அற்றுவிட்டமானுடம் பெற்றுவிட்டால் மனங்களிலும்
தலங்களிலும் திருத்தங்கள்நிகழ்து மகிழலாமே
என்றோ ஆண்டவன்மூடிய கண்களை விழிப்பான்.
இன்பமேசூழும் உலகமெலாம் நலம்பெறும்.
அற்புதன் ஆண்டவனுக்கு தமிழெழுத்து மலர்துாவி
தமிழ்சொல்லெடுத்து கவிமாலைசாத்தி
பெற்றிடுவோம் எம்மிடமில்லாத மானிடத்தை
பெற்றிடுவோம் இப்பிறப்பின் நற்பயனை.