11.06.2011த.ஆ.2042--ஆயுதம்கொடுத்து தமிழர்களைக் கொலைசெய்த மேனன் பேச்சுக்கொடுத்து உலகஆதரவையும் கெடுக்கப்போகின்றார். நம்பியாரும் மேனனும் அறிக்கையில் குறிப்பிடப்படாத குற்றவாளிகளே!
இலங்கையில் 1978 இல் யேஆர் யெயவர்த்தனா அமெரிக்காவுடன் நெருக்கமானார் யானையைப் பரிசாகக்கொடுத்தார் இந்தியா-இந்திரா கடுப்பானார். தான் உருவாக்கிய உளவுத்துறைக்கு ஆலோசனை சொல்லி நிலையெடுத்தார். இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சி கிடைத்தது. இலங்கையில் கொலைகள் வெளிநாட்டு வெள்ளையர் அலன்தம்பதியர் கடத்தப்பட்டனர்.
இவ்வாறு தீவிரச்செயல்கள் அதிகரித்தன இலங்கையில் கலவரம் தமிழர்கள் அழிவுஆரம்பித்தது. இந்தியா தமிழர்களுக்கு ஆதரவுபோல் நாடகமாடியது சில உதவிகளையும் செய்தது. இந்தியாவில் அகதிகளை ஏற்றது. சிதம்பரக்கப்பலை அனுப்பியது மிராச்சை அனுப்பியது. அமைதிப்படையை அனுப்பியது. என்னநடந்தது. சிங்களரின் எண்ணப்படிநடந்தது. சிங்களவர்களையும் சிலதமிழ் இயக்கங்களையும் மிதவாதத்தலைவர்களையும் தன்வலையில் விழுத்தியது. பிரேமதாசா முட்டுக்கட்டையாக இருந்தார். அவரை ஒருகைபார்த்தது. இளனிகுடித்தவர்கள் தப்ப கோம்பை எடுத்தவர் பிரேமதாசாவைக் கொன்ற குற்றவாளிகள் ஆகினர். இவ்வாறான சித்து விளையாட்டுகளில் ஆசியாவில் இந்தியாவிற்கு நிகர்இந்தியாவே. எனவே முந்திய அமெரிக்காவின் .இடத்தில் இப்போது சீன அம்மளவுதானே வித்தியாசம். நிறம்வேறு நரி உன்றுதான் என்பதை தமிழர்கள் விளக்நடப்பது நன்று.