10 .06. 2011 --இலங்கை அரசிடம் இந்தியா கோருவது என்ன?கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது என் சொற்படிக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் ஈழம் பெற்றுத்தருவேன் என்றார் அதிமுக தலைவர் செயலிதா.
அத்தேர்தலில் திமுக கூட்டணியே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது நடந்து முடிந்த தமிழக தேர்தலில் அதிமுக வென்று தமிழக முதல்வராகவும் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் கொழும்பு செல்ல உள்ள சிவசங்கரமேனன் ஜெயலலிதாவைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை கச்சத்தீவு கடற்பகுதியில் நிலை நாட்டுவது தொடர்பாகவும், முகாம்களில் உள்ள மக்களின் மறுவாழ்வு குறித்தும், சிங்களர்களைப் போல தமிழர்களும் சம உரிமை பெற்று வாழும் வகையிலான வழிவகைகள் காணப்பட வேண்டும் என்று ஜெயலலிதா சிவசங்கரமேனனிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிவசங்கர்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு.
09-06-2011 - 14:38
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் உள்ளிட்ட குழுவினர் நாளை இலங்கை பயணிப்பதாகத் தெரிகிறது. அதிகாரபூர்வமாக இப்பயணம் எதற்காக? இலங்கை அரசிடம் இந்தியா கோருவது என்ன? என்பவை போன்ற விஷயங்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் இன்று திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் சென்னையில் சந்தித்துப் பேசினார். மேனனுடனான சந்திப்பின் போது முதல்வர் தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்தும் அரசியல் உரிமைகள் குறித்தும் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.