இதனை ஏற்று வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் இணங்கியுள்ளது. இது ஒரு மைல் கல்லாக நோக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் ஆனது, நீதிமன்று, பொது நீதிமன்று மற்றும் உரிமையியல் சேவை நீதிமன்று என்ற மூன்று நீதிமன்றங்களை உள்ளடக்கியது.
ஒவ்வொரு நீதிமன்றுக்கும் ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு சமர்ப்பிக்கப்படும் வழக்குகள் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் இரு நிலைகளில் விசாரிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நீதிமன்றமே ஐரோபிய அரசாங்கங்களுக்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையிலான சட்ட முறுகல்களைத் தீர்த்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.