குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

என்னருமைத் தாய் நிலமே...ந.சுபேசு(ஸ்) ...

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் நினைவுகளிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்..... தசாப்தங்களாய்ப் போராடித்
தாய் நிலத்திற்க்காய்
உதிரமிட்டுக்
கட்டிக் கட்டிக்
காத்த கனவுகளை
உன் பிள்ளைகளின்
பெருவிருப்பைச்
சிதைக்கும்
ஊழிக்காலம் ஒன்று
உன் மடியில்
உருவான போது
எப்படித்
துடித்திருப்பாயம்மா
என்னருமைத் தாய் நிலமே......

ஒட்டி உலர்ந்த
வயிறுகளுடனும்
வெடித்துப் பிளந்துபோன
உதடுகளுடனும்
எச்சிலைக்கூட விழுங்க
இடைவெளியின்றி
ஏவப்பட்ட
செல்களின்
நடுவே எங்கள்
பச்சிளம் குழந்தைகள்
பரிதவித்தனவாம்
ஜயகோ....
எம்பிள்ளைகள்
துடித்தபோது
எப்படித்தாங்கினாயம்மா
என்னருமைத் தாய் நிலமே......

கந்தகப்புகை நடுவே
கண்ணுறக்கம்
மறந்துவிட்டு
உந்தனுக்காய்
வெந்தணலில் நீராடிய
வேகாத இலட்ச்சியங்களின்
வித்துடலைக்கூடச்
சிதைத்த பாதகரை
வெறிகொண்ட பித்தரை
சுமக்க வேண்டிய
கொடுமைதனை
எப்படித்தாங்கினாய் அம்மா
என்னருமைத் தாய் நிலமே......

உப்புக்காற்றூறிய
உன் கரையோரம்
நீளச்
செத்துக்கிடந்தது
எம் சந்ததி
செருக்குடன்
மேலேறி நடந்தது
இனவாதம்
கொத்துக் கொத்தாய்
கொடுப்பதற்கா
நாங்கள்
கொள்கைகளில்
தீக்குளித்தோம்
பித்துப்பிடித்துப்போய்
உலகத்தின் வீதிகளில்
கத்தினோம்
திசையறியாது
நின்றோம்
தீக்குளித்தோம்
அத்தனையும் வீணாக
ஆணவம் வென்றதென்று
விக்கித்துப்போனாயா அம்மா
விதி மகளின் செயல்கண்டு
என்னருமைத் தாய் நிலமே......

போர்தின்ற பெருநிலத்தில்
வேரோடிக்கிடக்கும்
சுதந்திரத்திற்கான
தவிப்புக்களில்
உன் மடியில்
ஓயாது
கணன்று கொண்டிருக்கும்
தீநாக்கின் வெம்மைகளைத்
தின்று வளர்ந்த
சுதந்திரப்பறவைகள்
வெளிப்பட்டு
நிளம் பிளக்க
எம் கனவுகளை
உரத்துச் சொல்லிய
வானத்தை தின்றுவிட்டு
வெற்றிடத்தை எமக்களித்துக்
காலம் உறங்குகிறது
கண்டுடைந்தாயா அம்மா
என்றும் கலங்கா
கலிங்கத்துத் தேசமே
என்னருமைத் தாய் நிலமே......

இழப்புகளும் வலிகளும்
இருந்துவாட்ட
ஏக்கங்களும் சோகங்களும்
வளர்ந்து
எதிர்காலத்தை தின்றுவிட
நிழலற்ற நிலங்களிலே
படுத்துறங்கி
நிச்சயமற்ற நாட்களிலே
வாழ்ந்து கொள்ளும்படி
உன் பிள்ளைகளை மட்டும்
சபித்துப்
பிடித்துக்கொண்ட
பெருஞ்சாபத்தை நினைத்து
திக்கெல்லாம் சிதறிக்கிடக்கும்
சந்ததியை நினைத்து
தீப்பட்ட புண்ணாக
தீண்டவொண்ணா நிலமாக
தீய்ந்துகிடக்கிறாயா அம்மா
என்னருமைத் தாய் நிலமே......

வண்ண வண்ணமாய்
வளர்ந்திருக்கும்
வயல் நிலங்கள்
வானளாவ உயர்ந்த கட்டிடங்கள்
அகண்டு பெருக்கும்
அழகழகான வீதிகள்
துறைமுகங்கள்
தூங்கா நகரங்கள்
ஒல்லியும் குண்டாயும்
உடலை மாற்றிய
மனிதர்கள் என்று
ஒட்டுமொத்த
சிங்களபுரியே
சிருஷ்டியின் மூர்க்கத்தில்
அதிரும்போது
உன் மடியில் மட்டும்
தீநாக்குகள் வந்து விழுந்தது
ஏனோ அம்மா
என்னருமைத் தாய் நிலமே......

புழுதி எழும் வீதிகள்
அக்கினி வெயிலெரிக்க
அங்குமிங்குமாய்
சில குடிசைகள்
ஒவ்வொரு வீட்டிலும்
பலி கொடுத்த
வலிகள்
அதிர்ந்து பேசக்கூட
முடியாமல்
மிரட்ச்சியுற்ற கண்கள்
உக்கிர வறுமையின்
வக்கிரத்தாலும்
போர்தின்ற வடுக்களாலும்
மக்கிப்போன
வாழ்க்கையை சுமந்தபடி
எட்டிப்பார்க்கும்
தலைகள் என்று
என் அன்னை மண்ணே-உன்
முற்றத்தில் மட்டும்
முட்களின்
விதைகளை வீழ்த்திய
விதிப்பறவையை
என் செய்வேன்
என்னருமைத் தாய் நிலமே......

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.