பான் கீ மூனுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் பதில் வதிவிடப் பிரதிநிதி மஞ்சீவ் சிங் பூரில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையிடம் ஆசிய பிராந்திய நாடுகளின் நிலைப்பாடு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கீ மூன் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது- வைகோ.
08 ஜூன் 2011
தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது என வைக்கோ தெரிவித்துள்ளார்.
அனுப்புக முகப்பு, இந்தியச்
வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் - ஜெயலலிதாவிற்கு பழ. நெடுமாறன் பாராட்டு
08 ஜூன் 2011
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
ஆறரைக்கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இராசபக்சேயைப் போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும். இத்துடன் நின்று விடாமல் முதல்வர் ஜெயலலிதா இந்தியா முழுமையிலும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டில்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும் எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.
( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்