* அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில், நீல்ஸ் நகரில், சிகாகோ-போர்ட் ஹூரான் இடையே ஓடும் ஆம்ட்ராக் ரெயிலில் 4 பயணிகள் கத்தியால் குத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
* ஆஸ்திரேலிய நாட்டில், மெல்போர்ன் நகரில் 36 மாடிகளை கொண்டது, சிட்டி ரோடு டவர் என்ற கட்டிடம். இந்த கட்டிடத்தின் 26-வது மாடியின் பால்கனியில் இருந்து ரகுமத் சந்து என்ற 21 வயது வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். இவர் அங்குள்ள பஞ்சாப் நடனக்குழுவின் உறுப்பினராக இருந்து வந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
* பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹகுபிட் புயல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இது பிலிப்பைன்சை நெருங்கி வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து தப்பிக்கிற வகையில் 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.