சுவிட்சர்லாந்தின் புதிய தேசிய கீதத்தினை உருவாக்கும் போட்டி ஒன்றினை அமைப்பாளர்கள் குழு ஒன்று மேற்கொண்டு வருகின்றது.
சுவிட்சர்லாந் பொது நல சங்கம் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு நடத்தும் இந்த போட்டியில் 200க்கும் மேலானோர் தங்களது படைப்பினை அனுப்பியுள்ளனர்.
அந்த 200 படைப்பில் இருந்து சிறந்ததை தேர்ந்தெடுக்க 18 பேர் கொண்ட இசையறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய நடுவர் குழு செயல்பட்டுள்ளது.
தற்போது இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 நபர்களின் படைப்புகளை வரும் வாரத்தில் சுவிஸின் தேசிய மொழிகளான பிரெஞ்ச், ஜேர்மன், இத்தாலியன் மற்றும் ரோமனில் மொழிமாற்றம் செய்யவுள்ளனர்.
இதையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் 3 இறுதி பாடல்களை இணையத்தில் வெளியிட்டு, மக்களின் வாக்குகளை வைத்து அடுத்த கட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், குறுஞ்செய்தி மூலமாகவும் வாக்களிக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறுதியாக தெரிவு செய்யப்படும் தேசிய கீதம் எதுவென்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் வரும் செப்டம்பர் 12ம் திகதி தெரிந்து கொள்ளலாம்.