இவரது கண்டுபிடிப்பான radio real time tagging system, பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர் லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
இவரது கண்டுபிடிப்பான intelligent wirless passive sensor technology system விமான நிலையங்களில் பாதுகாப்பு சேவைகளுக்கு மிகவும் உபயோகமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது.
சிதம்பரநாதன் சபேசன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
அத்துடன் இவர் தற்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கட் கழக தலைவராகவும், கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில்நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.