சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது. வயிற்றின் நண்பன் தேன் வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது.
அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம். ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத் துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.
மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய் களையும் தடுக்க வல்லது தேன்.
வீட்டுத்தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருக்கிறதெனில், எப்போதும் நம்முடன் நல்லதொரு மருத்துவர் இருப்பதாக அர்த்தம்.
முருங்கைக்காய் பசியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும், தலைவலியைப் போக்கும், கடும் இரத்தபேதியைக் குணப் படுத்தும், இரத்தத்தை, சிறுநீரைச் சுத்தப் படுத்தும்.
உஷ்ணம், பித்தம், வாயு தொல்லை யுடையவர்கள் மட்டும் முருங்கைக்காயைக் குறைப்பது நல்லது.
நீரழிவு நோயைத் தீர்க்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு.
இலையுடன், எள் சேர்த்து தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால் கடும் நீரழிவு நோயும் கட்டுப்படும்.
காய்ச்சல், உடல் அங்கங்கள் உணர்ச்சியற்றிருத்தல், நரம்புத்தளர்ச்சி இவற்றிற்கு முருங்கைமர வேரை நீர் விடாமல் அரைத்து சிறிதளவு பசும்பாலில் கலந்து காலை, மாலை அருந்தினால் நன்கு குணம் தெரியும்.
இதயத்துக்கு வலுவூட்டும் சக்தி முருங்கைப் பூவுக்கு உண்டு. முருங்கைப்பூவை வேக வைத்து தொடர்ந்து உணவோடு சேர்த்து வந்தால் இதயம் பலப்படும்.