குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

யப்பானில் காபி மெசின்களை விற்கும் ரோபோக்கள்

டோக்கியோ :யப்பானில் காபி தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்ய ரோபோக்களை ஈடுபடுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

காபி மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் தயாரிப்பி்ல் பிரபலமானது நெஸ்ட்லே நிறுவனம். இந்நிறுவனம் ஜப்பானில் உள்ள ஸ்டோர்களில் காபி தயாரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்வதற்கென்றே பிரத்யேகமாக 'பெப்பர்' என்ற ரோபட்டுகளை பயன்படுத்துகிறது.

ஹாலிவுட் படத்தில் வருவதைப் போன்றே வெள்ளை நிற பிளாஸ்டிக் பாடியால் போர்த்தப்பட்டுள்ள இந்த ரோபட்டுக்கு மனிதர்களை போன்ற முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரமுள்ள இந்த ரோபோ ரோலர்களால் அற்புதமாக நகரும். வாடிக்கையாளர்களுக்கு விபரங்களை தெரிவிக்க ரோபோவின் இதயத்தில் டேப்லட் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு தனது செயற்கை அறிவு மூலம் 80 சதவீதம் வரை துல்லியமாக பதிலளிக்கிறது.

 

1,670 டாலர் மதிப்புடைய இந்த ரோபோ வரும் பிப்ரவரி மாதம் மூலம் விற்பனைக்கு வருகிறது. அதற்கு மாதாந்திர பிரீமியம் கட்டணமும் உண்டு. ஏற்கனவே, இந்த ரோபோக்கள் ஜப்பானில் 74-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் மொபைல் போன்களை விற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.