ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்
1.அய்.நா.வில் வினா எழுப்புவான்
எதிர்காலத்தில்
ஈழத் தமிழன்!
மறுநாள் உதிக்கும்
எழுச்சிச் கதிரவன்.
குமாரி.தே.இரம்யா
3.காற்றின் திசை மாறினாலும்
மேல் நோக்கியே எரியும்
விடுதலைத் - தீ
4.உலகெங்கும்
விதைக்கப்பட்டிருக்கின்ற
தமிழ் விதைகள்
யாதுமானவன் - கீழருங்குணம்
5.சாம்பல் அல்ல
நீறுபூத்த நெருப்பு
காலக்காற்றே வீசு!
வே.ம.தமிழரசு.
6.ஈழத்தமிழரின் தோல்வி
உலகத் தமிழர் கற்ற பாடம்
உதயமாகும் ஈழத்தமிழர் உரிமை
போழூர் - தயாநிதி
7.அப்பாவித் தமிழர் பெயரில்
அரசியல் விபச்சாரம்
கொழுக்கும் கருணாக்கள்!
ஏழைதாசன்-அடப்பன்வயல்.புதுக்கோட்டை
8.வதை முகாம்
வரிசையில் வாடுகிறது
விருந்தோம்பிய தமிழினம்!
வே.ம.தமிழரசு
9.பாதுகாப்பு முகாமில்
இருக்கிறார்கள் தமிழர்கள்
எந்தப் பாதுகாப்புமின்றி
வழக்கறிஞர்.இ.தி.நந்தகுமாரன்
வளசரவாக்கம்.சென்னை-87
10.தாய்ப் பாலுக்கு
கதறி அழும் குழந்தை
சடலமாய் ஈழத்தாய்!
வெ.இராம்குமார் .வேலுார்
தொடரும்.................
தொகுப்பு- முல்லைமைந்தன்