வில்னியஸ்: தை 1-ந்தேதி முதல் யூரோ பயன்படுத்தப்பட உள்ளதால் லிட்டாஸ் இனிமேல் பயன்படாது என்று எண்ணி, நமது நாட்டின் பணம் உலக அளவில் நினைவில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் 26 வயது வாலிபர் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ் லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க எண்ணினார். இதற்கான ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து ஒருவாரம் செலவழித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முன்னதாக 6 லட்சம் நாணயங்களை கொண்டு பிரமிட் உருவாக்கப்பட்டது. அந்த உலக சாதனையை நாங்கள் எப்படியும் முறியடித்து விடுவோம் என்று உறுதியாக இந்த முயற்சியை எடுத்து 10 லட்சம் நாணயங்களை வைத்து உருவாக்கினோம் என்றார். இதற்காக செலவழிப்பட்ட நாணயத்தின் மொத்த தொகை சுமார் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ஆகும்.