குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

10 லட்சம் நாணயங்களை வைத்து பிரமிடு அமைப்பு: லித்வேனியா வாலிபர் உலக சாதனை

வில்னியஸ்: தை 1-ந்தேதி முதல் யூரோ பயன்படுத்தப்பட உள்ளதால் லிட்டாஸ் இனிமேல் பயன்படாது என்று எண்ணி, நமது நாட்டின் பணம் உலக அளவில் நினைவில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் 26 வயது வாலிபர் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ் லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க எண்ணினார். இதற்கான ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து ஒருவாரம் செலவழித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முன்னதாக 6 லட்சம் நாணயங்களை கொண்டு பிரமிட் உருவாக்கப்பட்டது. அந்த உலக சாதனையை நாங்கள் எப்படியும் முறியடித்து விடுவோம் என்று உறுதியாக இந்த முயற்சியை எடுத்து 10 லட்சம் நாணயங்களை வைத்து உருவாக்கினோம் என்றார்.  இதற்காக செலவழிப்பட்ட நாணயத்தின் மொத்த தொகை சுமார் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ஆகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.