போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் வாய்ப்புகளுக்கான போதுமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் போன்றவை தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
முன்னாள் போராளிகளைப் பொறுத்தவரை அவர்கள் மீதான தேவையற்ற சந்தேகங்கள் காரணமாக தொழில் முனைவோர் அவர்களுக்கு வேலைகளை வழங்க தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகளும், உரிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இளைஞர்களுக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து பல குடும்பங்களுக்கு வருகின்ற பணமும் இளைஞர்கள் தொழில் நாட்டம் இன்றி காணப்படுவதற்கு ஒரு காரணமாக சர்வானந்தன் குறிப்பிட்டார்.