03 .6. 2011த.ஆ.2042-- சுதந்திர வர்த்தக வலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து யெர்மனிய தூதுவர் யென்சுபுளொட்னர், பாதுகாப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அதீத அதிகாரங்களை பிரயோகிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினர் தமது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் யெர்மனியர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடு செய்வதனை மோசமாகப் பாதிக்கும் என யெர்மனிய தூதுவர் யென் புளொட்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் யெர்மனிய நிறுவனங்கள் சில சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஏதேனும் எதிர்ப்புகள் இருந்தால் அது வெளிவிவகார அமைச்சின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தின் உயர்அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.