பணியாளர் இல்லாமல் தானியங்கி தொழில் நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வரும். துபாய் : அபுதாபி யாஸ் மாலில் 14000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு ராட்டிணமான ரோலர் கோஸ்டர் வடிவமைப்பில் உலகின் மிகப்பெரிய உணவகம் ஏற்படுத்தபட்டுள்ளது.378 இருக்கைகளுடன் தானியங்கி தொழில்நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வருவதற்கு 30 ரோலர் கோஸ்டர் வடிவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உணவு ஆர்டர் செய்தால் நேரடியாக டேபிளுக்கு வரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் தனி குறியீடு கொடுக்கப்பட்டு தனி தனியாக கம்ப்யூட்டர் தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவையும், இருக்கை எண் குறித்த தகவலையும் டேபிளிலுள்ள கணினியின் தொடுதிரையில் டைப் செய்து கார்டு மூலம் அதற்கான தொகையையும் செலுத்தி விட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரோலர் கோஸ்டர் வடிவிலான பாதை வழியாக சுற்றி ,சுற்றி தானியங்கி தொழில்நுட்பத்தில் ஆர்டர் செய்த உணவு முற்றிலும் பாதுகாப்பான பாத்திரத்தில் வாடிக்கையாளரின் டேபிளுக்கு வந்து விடும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஹோட்டல் பணியாளர் உதவியின்றி வாடிக்கையாளர்கள் உணவை பெற முடியும்.
உலகின் வேகமான ரோலர் கோஸ்டர் ராட்டினம் அமீரகத்தில்தான் உள்ளது.எனவே பொருத்தமான வகையில் இந்த உணவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.நிச்சயம் இது குழைந்தைகள் ,பெரியவர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் என உணவகத்தின் நிறுவனர்கள் தெரிவித்தனர். ஜெர்மனியில் இது போன்ற உணவகம் உள்ளது குறிப்பிடதக்கது