22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள அசோ மலையிலிருந்து வெளியாகும் லாவா குழம்புகள் மற்றும் புகை காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வானம் சாம்பல் நிறத்துடன் காணப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதிக்கு மிக அருகில் உள்ள குமாமோட்டோ நகரிலிருந்து புறப்படும் 12க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் டோக்கியோவுக்கு மேற்கில் உள்ள மவுண்ட் ஓண்டக்கில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு காரணமாக 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.