குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

திரையுலகினரின் பாராட்டு விழாவில் பங்கேற்க - செயலலிதா மறுப்பு .திரையுலகத்தினரின் பசப்புஉடைப்வு.

02.06.2011--  திரையுலகத்தினரின் பாராட்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று முதல்வர் செயலலிதா கூறிவிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல இந்நாள் முதல்வர் செயலலிதாவிடம் யால்ரா பலிக்காததால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திரையுலக முக்கியஸ்தர்கள். கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஏராளமான சினிமா விழாக்களில் பங்கேற்று பாராட்டு மழையில் நனைவார். இதுதவிர முதல்வரை பாராட்டுவதற்காகவே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, தமிழ் மகனுக்கு பாராட்டு விழா என எக்கச்சக்க பாராட்டு விழாக்களையும் திரையுலகம் சார்பில் நடத்தி கருணாநிதியை குஷிப்படுத்தியே காலத்தை ஓட்டி வந்தனர்.

இப்போது ஆட்சி மாறி விட்டது. காட்சிகளும் மாறத்தொடங்கி விட்டன. முதல்வர் பொறுப்பை கவனிக்காமல் எந்நேரமும் சினிமா விழாக்களில் நேரத்தை கழித்துக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை காட்டமாக விமர்சித்து வந்த செயலலிதா, முதல்வரானதும் என்ன செய்யப்போகிறார் என்று பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏனென்றால் செயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தாயே... தமிழே என்று புகழ்பாட ஆரம்பித்து விட்டது திரையுலக யால்ரா கூட்டம்.

தி.மு.க.ஆட்சியின்போது செல்வாக்குமிக்க ஆளும் கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிவாங்கப்பட்ட நடிகர் வியய், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். தனது ரசிகர்களை அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் நினைத்தது போலவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதனால் வியய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று முதல்வர் யெயலலிதாவுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல பெப்சி அமைப்பினர் புதிய முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்றும் விரும்பி முதல்வரிடம் திகதி கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் திரையுலக யால்ராக்களின் அழைப்பை புறந்தள்ளிய யெயலலிதா எனக்கு நிறைய மக்கள் பணிகள் இருக்கிறது. சினிமா விழாக்கள் எதுக்கும் வரும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டாராம் காறாராக! முதல்வரின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது திரையுலகம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.