துபாய்: துபாயில் 2015-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை உலக புகழ்பெற்ற துபாய் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி துபாயின் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தங்க நகை நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாகவும் இதற்காக 160-லிருந்து 200 கிலோ தங்கம் வரை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ஜனவரி 2-ம் தேதி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என துபாய் ஷாப்பிங் திருவிழா அமைப்பாளர்கள் இத்தகவலை வெளியிட்டனர். ஜனவரி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள துபாய் ஷாப்பிங் திருவிழாவையோட்டி 100 கிலோ தங்கம் குலுக்கல் முறையில் வாடிக்கையாளார்களுக்கு பரிசளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.