இந்நிலையில், நடிகை விசயலட்சுமி நேற்று மதியம் சென்னை கா.து.அதிகாரியிடம் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நானும் இயக்குநர் சீமானும் காதலித்தோம்.
தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால், கா.து. விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் செல்போனை தொடர்பு கொண்டால் அவர் எடுக்கவில்லை. அவரது சகோதரி பேசினார். அவரிடம் கேட்டால், “அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை; தூங்கிக் கொண்டு இருக்கிறார்.
எனது அக்காவும் இயக்குநர் சீமானும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக கூறினார். இந்நிலையில் திடீரென சீமான் அக்காவை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். அக்காவை விட்டு சில நாட்களாக அவர் ஒதுங்கி செல்கிறார். மேற்கொண்டு என்னால் எதுவும் சொல்ல முடியாது’’ என்று கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
‘பொய்யான புகார்’
இயக்குநர் சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகர் கூறுகையில், “விசயலட்சுமி சகோதரி விவாகரத்து வழக்கு தொடர்பாகத்தான் அவரை சீமான் என்னிடம் அழைத்து வந்தார்.
சீமானுக்கும் விசயலட்சுமிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சீமான் மீது விசயலட்சுமி பொய்யான புகார் கொடுத்திருக்கிறார். யாரோ அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அவரை தூண்டி புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள்’’ என்றார்.