குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

என்னைக் காதலித்து ஏமாற்றினார் இயக்குனர் சீமான்! கா.துறையில் புகார் கொடுத்த நடிகை

 வியாழன், 02 .06. 2011த.ஆ.2042-- இயக்குநர் சீமான் மீது காவல்துறைஅதிகாரியிடம்  நடிகை புகார் செய்துள்ளார். ‘பிரண்ட்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் விசயலட்சுமி. பின்னர் ‘கலகலப்பு’, ‘ராமச்சந்திரா’, ‘மிலிட்டரி’, ‘சூரி’, ‘எஸ் மேடம்’, ‘வாழ்த்துக்கள்’, ‘பாசு என்கிற பாசுகரன்’ படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடம், தெலுங்கு படங்களிலும், டிவி சீரியல்களிலும் விசயலட்சுமி நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை விசயலட்சுமி நேற்று மதியம் சென்னை கா.து.அதிகாரியிடம் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நானும் இயக்குநர் சீமானும் காதலித்தோம்.

தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால், கா.து. விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் செல்போனை தொடர்பு கொண்டால் அவர் எடுக்கவில்லை. அவரது சகோதரி பேசினார். அவரிடம் கேட்டால், “அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை; தூங்கிக் கொண்டு இருக்கிறார்.

எனது அக்காவும் இயக்குநர் சீமானும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக கூறினார். இந்நிலையில் திடீரென சீமான் அக்காவை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். அக்காவை விட்டு சில நாட்களாக அவர் ஒதுங்கி செல்கிறார். மேற்கொண்டு என்னால் எதுவும் சொல்ல முடியாது’’ என்று கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

‘பொய்யான புகார்’

இயக்குநர் சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகர் கூறுகையில், “விசயலட்சுமி சகோதரி விவாகரத்து வழக்கு தொடர்பாகத்தான் அவரை சீமான் என்னிடம் அழைத்து வந்தார்.

சீமானுக்கும் விசயலட்சுமிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சீமான் மீது விசயலட்சுமி பொய்யான புகார் கொடுத்திருக்கிறார். யாரோ அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அவரை தூண்டி புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள்’’ என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.