மேயர் யெனரல் எஸ்.எச். முனசிங்க மேலும் கூறுகையில்...
இறுதி யுத்தம் மிகவும் கடுமையாக இடம்பெற்றது. படையினருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடுவதில் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம். 2006ஆம் ஆண்டு எங்களிடம் 108 இராணுவ வைத்தியர்கள் மாத்திரமே இருந்தார்கள்.
அதன்பின்னர் பலரை நாங்கள் பயிற்றுவித்தோம். யுத்த களத்தில் இராணுவ மருத்துவர்களின் பங்கு பெருமளவில் இருந்தது. பயிற்றப்பட்ட வைத்தியர்களினாலும் உதவியாளர்களினாலும் பாரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலே ஆரம்பித்த யுத்தம் வன்னியில் நிறைவடைந்தது. கிழக்கிலும் பார்க்க வன்னியிலேயே படையினருக்கு பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. கிழக்கில் 5.15 வீதமான உயிர்ச்சேதம் தான் நிகழ்ந்தது. ஆனால் வன்னியில் 78.5 வீதமான உயிர்ச்சேதம் பதிவாகியுள்ளமை துரதிர்ஷ்டவசமானது.
அடர்ந்த காடு, திறந்த வெளி, சகதி நிலங்கள் என பல முனைகளில் எமது படையினர் போராட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் தான் அதிகளவான உயிர்ச் சேதங்களை படையினர் எதிர்கொள்ள நேர்ந்தது.
குண்டு வெடிப்புகளின் மூலம்தான் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 59.6 வீதமான உயிரிழப்பு குண்டு வெடிப்புகளினால்தான் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39.9 வீதமான படையினர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் மூலமான உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் புலிகளின் ஆட்லரி தாக்குதலுக்கு இலக்காகியவர்கள். இந்த குண்டு வெடிப்புகளில் ஆட்லரி குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் 81.2 வீதமானவர்கள்.
எதிரிகளின் ஆட்லரி தாக்குதல் எமக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.