அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைக்கின்றன. இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. அதில் இந்நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை 3 பேர் மாறி மாறி சென்று பணி மேற்கொள்கின்றனர்.
அது போன்று தற்போது 3 விண்வெளி வீரர்கள் நேற்று ரஷ்ய ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகம் புறப்பட்டு சென்றனர். அவர்களில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த பெண் வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோ ரெட்டி ஆவார்.
இவருடன் ரஷ்யாவின் ஆன்டன் ஷகாபிளெரோவ் மற்றும் அமெரிக்காவின் டெர்ரி விர்ட்ஸ் ஆகியோரும் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 2.49 மணிக்கு (சர்வதேச நேரப்படி) ரஷ்யாவின் சோயுஷ் – 15 எம் விண்கலத்தில் அதி சோயுஷ் – எப்.ஜி.ராக்கெட் மூலம் புறப்பட்டு சென்றனர்.
இந்த ராக்கெட் கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 6 மணி நேர பயணத்துக்கு பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை சென்றடைந்தனர்.
தற்போது விண்வெளி ஆய்வகத்தில் சென்றுள்ள 3 பேரும் வருகிற மே மாதம் வரை அங்கு பணிபுரிவார்கள். இதற்கிடையே, சமந்தா கிறிஸ்டோபொ ரெட்டி சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சென்றுள்ள முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.