குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கற்பழிக்க முயன்றவரின் ஆணுறுப்பை வெட்டித் துண்டாடிய வீரப் பெண்!

02.06. 2011     . தன்னைக் கற்பழிக்க முயன்ற ஒருவரின் ஆண் உறுப்பை வெட்டித் துண்டாடி அதை எடுத்துச் சென்று காவல்துறையில் ஒப்படைத்தார் ஒரு பெண். பங்களாதேசைச் சேர்ந்த மொனியுபேகம் என்ற 40 வயதுப் பெண் தான் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார். தன்னை பாலியில் ரீதியில் பலாத்காரம் செய்ய முயன்ற அயல் வீட்டுக்காரரின் ஆண் உறுப்பைத் துண்டாடி அதை சேர்வைப் பையில் போட்டு காவல்துறை நிலையத்துக்கு எடுத்துச் சென்றார் அவர்.

மொஹமட் ஹக் மாஸி என்பவர் தான் இவ்வாறு தனது ஆண் உறுப்பை இழந்துள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் திருமணமானவர். ஐந்து பிள்ளைகளின் தந்தை.

இவர் தன்மீது இந்தப் பெண் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்தப் பெண் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

அவருக்கும் எனக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது, எனது மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு இவரோடு வந்துவிடுமாறு என்னை வற்புறுத்தினார்.

நான் அதற்கு இணங்க மறுத்ததால் என்னை திட்டமிட்டு பழிவாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மிர்சாபூர் என்ற இடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மொஹமட் ஹக் மாஸி குணமானதும் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் அவரின் ஆண் உறுப்பை மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் அது மிகவும் காலம் தாழ்த்தி கிடைத்ததால் மீண்டும் அதை இணைப்பது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கூறினர். இவர் ஆண் உறுப்பின்றி சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு வழி செய்யப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.