மொஹமட் ஹக் மாஸி என்பவர் தான் இவ்வாறு தனது ஆண் உறுப்பை இழந்துள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் திருமணமானவர். ஐந்து பிள்ளைகளின் தந்தை.
இவர் தன்மீது இந்தப் பெண் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்தப் பெண் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
அவருக்கும் எனக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது, எனது மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு இவரோடு வந்துவிடுமாறு என்னை வற்புறுத்தினார்.
நான் அதற்கு இணங்க மறுத்ததால் என்னை திட்டமிட்டு பழிவாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மிர்சாபூர் என்ற இடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொஹமட் ஹக் மாஸி குணமானதும் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் அவரின் ஆண் உறுப்பை மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் அது மிகவும் காலம் தாழ்த்தி கிடைத்ததால் மீண்டும் அதை இணைப்பது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கூறினர். இவர் ஆண் உறுப்பின்றி சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு வழி செய்யப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.