பிராங்க்பர்ட் : யெர்மனியில், கடந்த 1914-ம் ஆண்டு அடால்ப் கிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன், தனது இளமைக் காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களை வியன்னா ஓவிய கல்லூரியில் கிட்லர் விற்பனைக்கு கொடுத்தார். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர்.பின்னர், கிட்லரின் 11 அடி நீளம் மற்றும் 8.7 அடி அகலம் உள்ள ஓவியங்களை அவரது 2 சகோதரிகள் பொதுமக்களிடம் விற்று வந்தனர்.
அந்த ஓவியங்களில் ஒருசிலவற்றை அவரது தாத்தா 1916-ம் ஆண்டு வாங்கினார். பின்னர், சர்வாதிகாரியாக வலம் வந்த கிட்லர் இரண்டாம் உலகப் போரில் படுதோல்வி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், யெர்மன் தலைநகரான பிராங்க்பர்ட்டில் உள்ள நியூரம்பர்க் நகரில் நேற்று மாலை ஹிட்லரின் வாட்டர்கலர் ஓவியங்கள் வீட்லர் ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட்டன. அவரது பெரும்பாலான ஓவியங்களை பொதுமக்கள் விரும்பி ஏலத்தில் எடுத்தனர்.அதில், ஹிட்லரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வாட்டர்கலர் ஓவியத்தை ஒருவர் இந்திய மதிப்பில் ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.