பீஜிங் : பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துன்பத்தை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் செயற்கை முறையில் பிரசவ வேதனை ஆண்களின் அடிவயிற்றில் கட்டப்படுகிறது.
அதன் வழியாக வயிற்று பகுதியில் ‘எலெக்ட்ரிக் ஷாக்’ கொடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் குறைவாக கொடுக்கப்படும் அந்த ஷாக் நேரம் செல்ல செல்ல அதிகப்படுத்தப்படுகிறது. அது உடலில் பிரசவ வேதனை போன்ற வலியை ஏற்படுத்தி உணர செய்கிறது. இந்த சோதனையில் ஈடுபட 100-க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் இந்த வேதனையை ஒப்புக்கொண்டனர்.