குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

மனிதக்கழிவில் இருந்து தயாராகும் வாயுவில் இயங்கும், பயோ பேருந்து சேவை இங்கிலாந்தில் தொடக்கம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மனிதக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயு மூலம் இயங்கும் துதல் பேருந்து தனது பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பாத் என்ற நகரில் இருந்து பிரிஸ்டல் என்ற நகருக்கு சமீபத்தில் புதியதாக பயோ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஓடுவதற்கு டீசல் தேவையில்லை. மனிதக்கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் biomethane வாயுவவால் பேருந்து இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

ஐந்து மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து ஒரு டாங்க் வாயு தயாரிக்கலாம் என்றும், அதில் சுமார் 190 கிமீ வரை பேருந்தை இயக்கலாம் என்றும் இந்த பேருந்தை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர். இன்று தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த பேருந்து படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்தில் மனிதர்கள் டாய்லட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.