குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

ஈழத்திற்கு வருமாறு ஜெயலலிதாவை அழைக்க இலங்கை அரசு திட்டம்?

 

வடக்கின் தமிழ் மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அழைப்பொன்றை விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

 

வடக்கில் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

GTV News

அதன் மூலம் இலங்கை அரசாங்கம் தொடர்பான ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வுகளைத் தணிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு மாநிலத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்பான எதிர்ப்புணர்வுகளைத் தணிப்பதற்கும், அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை திரும்பவும் நாட்டுக்கு வரவழைப்பதற்கும் அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளவும் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.