குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

முல்லைத்தீவு பிரதேசத்தின் இடம்பெயர்ந்த மக்கள் அவதியுறுவதாக புகார்

இலங்கையின் வன்னியில் யுத்த முனைப்புகள் தீவிரம் பெற்றிருந்த போது பெருமளவிலான குடும்பங்கள் படகுகள் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையை வந்தடைந்தன.

இத்தகைய குடும்பங்கள் கடந்த இரு மாதங்களின் முன்னர் விடுவிக்கப்பட்டதுடன் இவர்களது படகுகளும் தற்போது கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசம் இதுவரை விடுவிக்கப்படாமையால் படகுகளை மீளப்பெற்ற போதும், இத்தகைய குடும்பங்கள் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே திருகோணமலையில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

விடுவிக்கப்பட்ட தங்கள் படகுகளையும் இவர்கள் புல்மோட்டையில் தங்களுக்கு அறிமுகமானோரின் பொறுப்பில் விட்டு விட்டே திருகோணமலையில் தங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதே வேளை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் குடாநாட்டைச் சேர்ந்தோர் மற்றும் மீள்குடியேற்றம் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்தோர் கடல்வழிப்பாதை வழியாக தங்கள் படகுகளைக் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.