இலங்கையின் வடக்கே வவுனியாவில், உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்களுக்குத் தனியான பாடசாலைகளில் கல்வியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்திலும், நெலுக்குளம் மகாவித்தியாலயத்திலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் மாத்திரம் 2600 மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த மாணவர்கள் ஏற்கனவே வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று வந்த போதிலும் இடநெருக்கடி உட்பட பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இவர்களுக்குத் தனியான பாடசாலைகளை வவுனியாவில் அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.