குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இறுதிச் சடங்குகள் நடைபெற்ற வேளை உயிருடன் எழுந்த பாட்டி

போலந்து நாட்டின் ஓஸ்ட்ரோ லுபெல்ஸ்கி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஜனினா கோல்கிவ்ஸ் (வயது 91). முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் இருந்த அவர் கடந்த 6-ம் திகதி உடல் அசைவற்று கிடந்தார். இதனால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர். பின்னர் ஒரு மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தனர். அப்போது ஜனினா இறந்து விட்டார் என்று கூறிய டாக்டர் அதற்கான சான்றிதழையும் வழங்கினார். இதனால், உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் அவரது உடலை, உடல் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்தனர்.

மயானத்தில் இறுதிச் சடங்கிற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. அப்போது, அவர் உடல் அசைவது போன்று தெரிந்தது. உடனே, குளிர்சாதன பெட்டியை திறந்து பார்க்கும்போது அவர் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்ததாக நினைத்த அவர் சுமார் 11 மணி நேரம் கழித்து உயிர்பிழைத்ததால் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

உயிருடன் இருந்தவருக்கு டாக்டர் இறப்பு சான்றிதழ் கொடுத்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.