குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இத்தாலியில் வாட்ஸ் ஆப் ஆதாரத்துடன் நடைபெறும் பாதி விவாகரத்துக்கள்!

இத்தாலி: நம்பிக்கையில்லாத திருமணம் காரணமாக இத்தாலியில் விவாகரத்து வழக்குகள் நாற்பது சதவீதம் உயர்ந்துள்ளதகாக இத்தாலிய வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜியான் எட்டோரே கூறுகையில், சமூக ஊடகங்கள் மூலம் உரை நிகழ்த்தி பின்னர் பேஸ்புக் மூலம் துரோகம் செய்கின்றனர். இப்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் தங்களது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரியாமல் உரையாடுகின்றனர். இதில் புகைப்படங்கள் பரிமாற  முடியும், மூன்று அல்லது நான்கு பேரிடம் ஒரே நேரத்தில் உரை நிகழ்த்த முடியும். இது ஒரு டைனமைட் போல் உள்ளது என்று அவர் கூறினார். 2012 நடந்த பெரும்பாலான விவாகரத்துகள் பேஸ்புக் உரையாடல் உதவியுடன் நிரூபிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வாட்ஸ் ஆப் உதவியுடன் கணவர்கள் செய்யும் தவறை மனைவிகள் சுட்டிக்காட்டி விவாகரத்து தரக் கோரி நீதிமன்றங்களை அணுகுகின்றனர். வாட்ஸ் ஆப்பை தற்போது உலகம் முழுவதும் 600 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் தற்போது புதிய மேம்பாடாக ஒருவர் அனுப்பிய தகவலை மற்றவர் படித்து விட்டால் அது உடனே அந்த உரைக்கு கீழ் ஊதா கலர் டிக் மார்க் ஆகா தெரியும். இதனால் தங்கள் அனுப்பிய உரை அவர் படிக்கவில்லை என்று பொய் கூறி தப்பித்து கொள்ள முடியாது என்று ஜியான் எட்டோரே தெரிவித்துள்ளார். எனவே ஆண்கள் முடிந்தவரை தவறு செய்யாமல் இருப்பது நல்லது என்றும் மேலும் தங்களது செல்போனை சப்தம் இல்லாமல் வைத்திருப்பது நல்லது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.