குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

உலகின் பயங்கர பெண் தீவிரவாதி சுட்டுக்கொலை உக்ரைன் அரசு மறுப்பு

உலகின் பயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக கருதப்பட்டு வந்தவர் சமந்தா லெவ்த்வெயிட் (வயது 30). ‘ஒயிட் விடோ’ (வெண்விதவை) என்று அழைக்கப்பட்ட லெவ்த்வெயிட், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மாம்பசா என்ற இடத்தில் ஓட்டல்களையும், வணிக மையத்தையும் தகர்க்க முயன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

மேலும், அந்த நாட்டின் தலைநகரான நைரோபியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் 67 பேர் கொன்று குவிக்கப்பட்ட அல் ஷகாப் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தளபதியாகவும் விளங்கியவர் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின் சமந்தாவை உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அறிவித்து, தேடி வந்தது.

லண்டன் நகரில் 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், 7 ஆம் தேதி சுரங்க ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப் படை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தீவிரவாதி ஜெர்மைன் லிண்ட்சே தான், இந்த சமந்தாவின் கணவர்.

இந்நிலையில், 4 குழந்தைகளுக்கு தாயான லெவ்த்வெயிட், 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் சென்று அங்கு அரசுக்கு ஆதரவான படையில் சேர்ந்து, குறி பார்த்து சுடும் வீராங்கனையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த சண்டையில், இவரை குறி பார்த்து சுடுவதில் வல்லவரான ரஷிய வீரர் ஒருவர் சுட்டுக்கொன்று விட்டதாக தற்போது ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமந்தாவை சுட்டுக்கொன்ற ரஷிய வீரரின் தலைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.3 கோடியே 78 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என உக்ரைன் சிறப்பு பணிகள் பிரிவு அறிவித்துள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி இங்கிலாந்தில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் படை வீரருமான ஆண்ட்ரூ லெவ்த்வெயிட்டிடம் கேட்டபோது, ”நான் எதையும் கேள்விப்படவில்லை. யாரும் என்னிடம் எதையும் சொல்லவில்லை. நானும் எதையும் கூறப்போவதில்லை” என்றார்.

ஆனாலும்,  சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.