குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

நோக்கியா செல்போனில் எண்ணற்ற ஆப்ஸ் வசதிகள்

  06.08.2011--இரட்டை சிம் வசதி கொண்ட நோக்கியா சி 2 அண்டு 3 மற்றும் நோக்கியா சி2 அண்டு 06 ஆகிய செல்போன்களில் புதிய தொடுதிரை மற்றும் டைப்பிங் வசதி ஆகியவையும், இந்தி யாவுக்கு என்றே குறிப்பிட்ட 10 வகை ஆப்ஸ் வசதியும் உள்ளது. இவை முதல் முறையாக இந்த வகை செல்போனில் வழங்கப் படுகிறது. செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமலும், பேட்டரியை எடுக்காமலும் உடனடியாக சிம் கார்டுகளை மாற்றிக் கொள்ள கூடிய வசதியும் உள்ளது.

நோக்கியா சி 2 அண்டு 06 என்ற பிரிமியம் வகையும் கிடைக்கிறது. இதுபற்றி நோக்கியா இந்திய நிறுவனத்தின் தென்மண்டல பொதுமேலாளர் டி.எஸ்.சிறீதர் கூறியிருப்பதாவது;-

நோக்கியாவின் தொடுதிரை மற்றும் டைப் செல் போன்கள், இணையதளம், மேப் வசதிகளையும், பல்வேறு ஆப்ஸ் அனுபவங்களை சந்தையில் ஒவ்வொருவரும் அறியும் வகையில் மிக சிறப்பாக வழங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தரையிலிருந்து மின்னை உறிஞ்சி ஓடும் வாகனம் கண்டுபிடிப்பு

  06.08.2011--தரைக்குக் கீழே பதிக்கப்பட்ட மின் கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டு தல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி, தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரிய தலைநகர் சியோலில் சியோல் கிராண்ட் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. மிகப் பெரிய ராட்டினம், ஓட்டல், நீச்சல் குளம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. பூங்காவை சுற்றிப் பார்க்க டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

டீசலுக்கு பதிலாக நவீன தொழில் நுட்பத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து கொரியா அறிவியல், தொழில் நுட்பக் கழகம் ஆய்வு நடத்தியது. மின் காந்த தூண்டுதல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தில் இயங்குவதற்கான வாகனங்கள் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

இதற்கு ஆன்லைன் எலக்ட்ரிக் வீக்கிள் (ஓஎல்இவி) என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த டிராம் வண்டிக்கு தண்டவாளம் தேவையில்லை. 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இது கார் போலவே ஓடும். பூங்கா முழுவதும் டிராம் செல்லும் தடத்தில் அடையாளத் துக்காக நீல நிற கோடு போடப்பட்டி ருக்கும். இந்த கோட்டுக்கு நேராக, தரைக்கு கீழே சுமார் ஒரு அடி ஆழத்தில் மின்சார கம்பிகள் செல்லும்.

அந்த வழியாக செல்லும்போது, மின்காந்த தூண்டுதல் விசையைப் பயன்படுத்தி, மின்சாரத்தை வாகனம் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும். இதன்மூலம் இன்ஜின் இயக்கப்படும்.

இதுபற்றி இன்ஜினீயர்கள் கூறுகையில், பாதாள மின்கம்பியானது உயர்அழுத்த மின் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால், மின்சாரம் எப்போதும் தடை படாது. மின்காந்த தூண்டுதல் முறையில் மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின்இழப்பு அவ்வளவாக இருக்காது. சொற்ப அளவே புகை வெளியாகும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது என்கின்றனர்.

பூங்காவில் இந்த வாகனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் டாப் 50 கண்டுபிடிப்புகளில் ஓஎல்இவி ஒன்று என்று டைம்ஸ் இதழ் கவுரவப்படுத்தி விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.