குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

உலகின் முதலாவது சாளரம்(யென்னல்) இல்லாத விண்ணுந்து!.

உலகின் முதல் சாளரம்( யன்னல்) இல்லாத விண்ணு ந்து(விமானம்) விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று விரைவில் உலகின் முதல் சாளரம்-( யன்னல்) இல்லாத விண்ணுந்தை சோதனை ஓட்டம் மூலம் பரிசோதிக்கவிருப்பதாகவும், இந்த விண்ணுந்துதில் பயணிக்கும் பயணிகள் வெளியே உள்ள காட்சிகளை தெளிவாக பார்க்கும் வகையில் இந்த விண்ணுந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வகையான விண்ணுந்துகளில் சாளரங்களுக்கு(யன்னல்களுக்கு) பதிலாக முழு நீள திரைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் பறக்கும் விமானத்தில் இருந்து வெளியே உள்ள காட்சிகளை பார்க்கலாம். பயணிகளுக்கு வெளிப்புற காட்சிகள் தெரியவேண்டாமென்றால் அதற்கேற்பவும் மற்றியமைத்துகொள்ளலாம். இது குறித்து செயல்முறை கண்டுபிடிப்பு மையம் தெரிவித்துள்ள தகவ லில், விண்ணு ந்திலிருந்து சிறிய சாளரம்வழியாக உலகை பார்த்த காலம் போய்விட்டது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் விண்ணுந்துகளில்உலகின் தெள்ள தெளிவான பரந்து விரிந்த காட்சியை பயணிகளுக்கு அளிக்கும். நாங்கள் அதற்காக அதிக வளையும் தன்மைக்கொண்ட, உயர் வரையறை டிஸ்பிளே தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறோம். விண்ணுந்தின் உட்புற சுவர்களில் இந்த டிஸ்பிலே பொருத்தப்பட்டு அதன் மூலம் படக்கருவிகளில் இருந்து காணொளிகளை கூட ஒளிப்பரப்ப முடியும். கரிம ஒளி உமிழும் இருமுனைய (Organic Light Emitting Diode) தொழில்நுட்பம் மூலம் இவை தயாரிக்கப்படுவதால் விண்ணுந்தின் எடை குறையும், எடை குறைந்தால் விண்ணுந்தை இயக்க தேவைப்படும் எரிவாயுவின் அளவும் குறையும். எரிவாயு பயன்பாடு குறைந்தால் அதிலிருந்து வெளியேறும் காபனீஒட்சை யிட்டின்  (co2-வின் )அளவும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.