குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

மாற்று கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்

மாற்று கர்ப்பப்பை பொருத்திய சுவீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான்.

பரிசோதனை முயற்சியாக இப்பெண்ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் அந்த ஆண் குழந்தை சற்றுக் குறை மாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். ஆய்வுப் பரிசோதனையாக கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட 9 பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரைத் தவிர வேறு இரண்டு பெண்களும் கருத்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்தப் பரிசோதனை முயற்சியின் வெற்றியின் மூலம், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமலோ அல்லது புற்று நோய் வந்து கர்ப்பப்பை இழந்தோ இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வழி பிறந்துள்ளது.

 

ஆனால் தற்போதைக்கு இந்த கர்ப்பப்பை மாற்று சிகிச்சை ஓர் அறிவியல் பரிசோதனை என்ற அளவில்தான் உள்ளது.