உலகையே உலுக்கி உள்ள எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக மருந்து
கண்டுபிடிக்க, ஐரோப்பிய நாடுகள் சபை 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் நைஜீரியா உள்ளிட்ட பல தெற்கு நாடுகள், மற்றும்
அமெரிக்காவில் எபோலா நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்கும்
விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எபோலா
தாக்குதலுக்கு அதிகப்படியானவர்களே ஆளாகி வருகின்றனர். இதனால் உலக நாடுகள்
பலவும் எபோலா வைரசுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த கவனம்
செலுத்தி வருகின்றன.
இந்த சமயத்தில்தான் ஐரோப்பிய நாடுகள் ரூபாய் 700 கோடி எபோலா நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்க நிதியுதவி அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணத்தை எபோலா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும், எபோலா
தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் கூட பயன்படுத்திக்
கொள்ளலாம் என்று ஐரோப்பிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.