தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்த நாம் தமிழர் இயக்க கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான்,கன்னடர்களுக்கு தேசிய கொடி இருப்பது போல், ராஜராஜசோழனின் புலிக்கொடியை தமிழர்களின் தேசிய கொடியாக அறிவிக்க வேண்டும்.
ஓட்டு போட பணம் வாங்குவதால், நம் உரிமைகள் பறிபோக தொடங்கி உள்ளன. தற் போதைய தி.மு.க., அரசு, கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மக்கள் பணத்தில் எமனுக்கு விளம்பரம் செய்து வருகிறது.
ஜாதிவாரியாக செய்த சலுகைகளை அடுக்கும் கருணாநிதி, ஜாதி இல்லை என்று சொல்ல தகுதியற்றவர். வரும் மே 18ல் மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
கோவையில் செம்மொழி மாநாடு நடத்த உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளது, தமிழ் மீது உள்ள பற்றின் காரணமாக அல்ல. ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை, தமிழர்கள் மத்தியில் மறைப்பதற்காகவே.
தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருக்கிறேன் என்றார்.