குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

காங்கிரசை அழிக்க எந்த செயலிலும் ஈடுபட தயார்: சீமான்

தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்த நாம் தமிழர் இயக்க கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான்,கன்னடர்களுக்கு தேசிய கொடி இருப்பது போல், ராஜராஜசோழனின் புலிக்கொடியை தமிழர்களின் தேசிய கொடியாக அறிவிக்க வேண்டும்.

ஓட்டு போட பணம் வாங்குவதால், நம் உரிமைகள் பறிபோக தொடங்கி உள்ளன. தற் போதைய தி.மு.க., அரசு, கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மக்கள் பணத்தில் எமனுக்கு விளம்பரம் செய்து வருகிறது.

ஜாதிவாரியாக செய்த சலுகைகளை அடுக்கும் கருணாநிதி, ஜாதி இல்லை என்று சொல்ல தகுதியற்றவர்.  வரும் மே 18ல் மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

கோவையில் செம்மொழி மாநாடு நடத்த உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளது, தமிழ் மீது உள்ள பற்றின் காரணமாக அல்ல. ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை, தமிழர்கள் மத்தியில் மறைப்பதற்காகவே.

தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.